முகப்பு
கல்வி

கற்பனை வளம் மிக்க நுண்கலை படிப்பு

அரசு கவின்கலைக் கல்லூரியில் 2013-14ம் ஆண்டிற்கான பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

Updated On : 1 ஜூன் 2013, 4:55 pm IST
பகிர்:

அரசு கவின்கலைக் கல்லூரியில் 2013-14ம் ஆண்டிற்கான பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. படிப்பில் சேர தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வழங்கப்படும் படிப்பு:

பி.எப்.ஏ., (காட்சித் தொடர்பு வடிவமைப்பு, வண்ணக்கலை, சிற்பக்கலை, சுடுமண் ஆலையக வடிவமைப்பு, துகிலியல், பதிப்போவியம்) ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

கல்வித்தகுதி: இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையதளப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 23 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் எனில் உச்ச வயது வரம்பு 26 ஆகும்.

முதுகவின் கலைப் பட்டப்படிப்பு, எம்.எப்.ஏ (காட்சித் தொடர்பு வடிவமைப்பு, வண்ணக்கலை, சிற்பக்கலை, சுடுமண் ஆலையக வடிவமைப்பு, துகிலியல், பதிப்போவியம்)

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்ப கட்டண தொகையுடன் ரூ.15க்கான தபால் தலை ஒட்டி, சுய முகவரி எழுதிய கவரை இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பம் பெறலாம். மேலும் சென்னை அல்லது கும்பகோணம் பகுதியில் உள்ள கல்லூரிகளில் விண்ணப்ப கட்டணம் வரைவோலையை செலுத்தி விண்ணப்பம் பெறலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 17ம் தேதிக்குள் வந்து சேரும் படி அனுப்ப வேண்டும்.

 கூடுதல் தகவல்கள் அறிய 044-25610878, 0432-2481371 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments