படிப்பு மட்டும் போதுமா?செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?
பட்டப்படிப்பு மட்டும் காப்பாற்றாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?
செய்யறிவு எனப்படும் செயற்கை நுண்ணறிவு எல்லோருடைய வேலையையும் ஒரே நேரத்தில் ஒன்று போல பறித்துவிடவில்லை.
தற்போது செய்யறிவு சில தகவல் தொழில்நுட்ப பணிகளை மிகச் சிறப்பாக செய்வதாகக் கூறப்படுகிறது. அதில், முதல் இடத்தில் இருப்பது கணினி தரவுகளை செயலாக்குதல், வடிவம்-தோற்றத்தை அடையாளம் காணுதல், புதிய உள்ளடக்கங்களை உருவாக்குதல் மற்றும் விதிகளை உருவாக்கிக் கொடுத்துவிட்டால் அதனை மிகச் சரியாக பின்பற்றுதல் போன்றவற்றில் சிறந்து விளங்குகிறது.
இவற்றில் தொடர்புடைய பணிகளில் இருப்பவர்களுக்கு செய்யறிவு ஆபத்தாகவே இருக்கும். அதுபோல, ஒருவர் செய்யும் வேலையை மீண்டும் மீண்டும் செய்வதாக இருந்தாலும் அதனை மிக விரைவாக செய்யறிவால் செய்துவிட அல்லது செய்யவைத்துவிட முடியும்.
Advertisement
இங்கே பட்டப்படிப்பு படிக்கப் போகும் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது. அதாவது, அறிவாளியான இளைஞர்கள், செய்யறிவைக் கண்டு பயப்படக் கூடாது. செய்யறிவைக் கொண்டு வேலை வாங்கும் இடத்துக்கு நீங்கள் செல்வதாகவே இருக்க வேண்டும்.
ஒவ்வொரு வேலையையும் செய்யும்போது மனிதர்களை வைத்துத்தான் செய்ய வேண்டுமா, இயந்திரத்தால் செய்துவிட முடியுமா என்று கேள்வி கேட்டுப் பாருங்கள். எந்த பதில் வருகிறதோ அதைப் பொருந்து அந்த படிப்பைத் தேர்வு செய்யலாம். அல்லது அதில் பயிற்சி பெறலாம்.
Is education enough What can you do to prevent your education from costing you your job?