ஈரம் காயாத ‘கை’யால் நெரிபட்டு மரணித்தது ‘அரசியல் நெறி’.. காங்கிரஸுக்கு ஆ. ராசா கண்டனம்!
ஈரம் காயாத ‘கை’யால் நெரிபட்டு மரணித்தது ‘அரசியல் நெறி’ என்று காங்கிரஸுக்கு ஆ. ராசா எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளதைப் பற்றி...
ஈரம் காயாத ‘கை’யால் நெரிபட்டு மரணித்தது ‘அரசியல் நெறி’ என்று காங்கிரஸுக்கு ஆ. ராசா எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் திங்கள்கிழமை வெளியான நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் தனிப்பெரும்பான்மை இல்லாததால் சிறிய கட்சிகளின் ஆதரவைக் கோரியுள்ளது.
திமுக கூட்டணியில் 28 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் மயிலாடுதுறை, மேலூர், விளவங்கோடு, குளச்சல், கிள்ளியூர் ஆகிய 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.
Advertisement
ஆட்சியமைக்க ஆதரவு கோரி தவெக தலைவர் விஜய் கேட்டுக்கொண்டதன் பேரில் தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் தேசிய தலைமை ஆதரவு தெரிவித்துள்ளது.
வரும் தேர்தல்களிலும் இந்தக் கூட்டணி தொடரும் என்றும் அதேநேரத்தில் மதவாத சக்திகளுடன் ஒருபோதும் கூட்டணி வைக்கக்கூடாது என்ற நிபந்தனையையும் விதித்துள்ளது.
தவெகவுடன் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு, ஆட்சியிலும் பங்கு உண்டு என்று கட்சியின் தலைவர் விஜய் ஏற்கெனவே தெரிவித்திருந்தபடியே தற்போது காங்கிரஸுக்கு ஒரு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெண் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக இருந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மீது திமுகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக திமுகவின் மக்களவை உறுப்பினர் ஆ. ராசா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “ஈரம் காயாத ‘கை’யால் நெரிபட்டு மரணித்தது ‘அரசியல் நெறி’ மட்டுமல்ல; அவசியமான ‘அடிப்படை நாகரீக’மும் தான்! வாழ்க ஜனநாயகம்!!” எனக் குறிப்பிட்டுள்ளார்.