மார்க்சிய கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக ஆர். செல்லசுவாமி தேர்வு!
மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக ஆர். செல்லசுவாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...
மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக செல்லசுவாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்று 5 தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
கீழ்வேளூரில் போட்டியிட்ட லதாவும், பத்மநாபபுரத்தில் போட்டியிட்ட ஆர். செல்லசுவாமி இருவரும் வெற்றி பெற்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மார்க்சிய கம்யூனிஸ்ட் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பத்மநாபபுரம் எம்.எல்.ஏ. ஆர்.செல்லசுவாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் பேரவைத் தொகுதியில் மார்க்சிய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆர். செல்லசுவாமி 15,569 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இடங்கள் தவெகவுக்கு கிடைக்காத நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியிடம் அக்கட்சி ஆதரவு கோரியிருந்தது.
இதையடுத்து தவெகவுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரவு தெரிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிகள் கடிதங்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Chellasamy has been elected as the leader of the Communist Party of India (Marxist) legislative party.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.