முகப்பு
மேற்கு வங்கம்

மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நிறைவு!

மேற்கு வங்கத்தில் இரு தொகுதிகளில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

மக்ராத் பஸ்சிம் தொகுதியில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவு - PTI
பகிர்:

மேற்கு வங்கத்தில் இரு தொகுதிகளில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

அதில், 2ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின்போது எழுந்த புகார்கள், முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் காரணமாக மேற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் இரு தொகுதிகளில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

Advertisement

இதனைத் தொடர்ந்து, மேற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலுள்ள மக்ராத் பஸ்சிம் தொகுதியில் உள்ள 11 வாக்குச்சாவடிகளிலும், டைமண்ட் ஹார்பர் பகுதியில் உள்ள 4 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.

பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 7 மணிக்கு நிறைவுபெற்றது.

இங்கு வாக்கு எண்ணிக்கை வருகிற மே 4 அன்று நடைபெறவுள்ளது.

summary

West Bengal: Repolling concludes at 15 polling stations!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.