மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் 600 வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?
அரசுக்கும், மீனவர்களுக்கும் இடையேயான தொடர்பை மேம்படுத்தும் விதமாக, தமிழக அரசின் மீன்வளத்துறையில் நிரப்பப்பட உள்ள 600 சாகர் மித்ரா பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசுக்கும், மீனவர்களுக்கும் இடையேயான தொடர்பை மேம்படுத்தும் விதமாக, தமிழக அரசின் மீன்வளத்துறையில் நிரப்பப்பட உள்ள 600 சாகர் மித்ரா பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: சாகர் மித்ரா(Sagar Mitra)
Advertisement
Advertisement
காலியிடங்கள்: 600
தகுதி: மீன்வளத்துறையில் மீன்வள அறிவியல், கடல் உயிரியியல், விலங்கியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.10,000 + 5,000
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷனில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.fisheries.tn.gov.in என்ற இணையதளப்பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து உங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள கடற்கரையோர மாவட்டங்களின் இணை இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.01.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/Sagar_Mitra_-_Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | இந்து அறநிலையத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்கலாம் வாங்க!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.