முகப்பு
வேலைவாய்ப்பு

பாதுகாப்புப் படையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்... தட்டச்சு, சுருக்கெழுத்து முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இந்திய ராணுவத்தின் துணை ராணுவமான மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் ( சி.ஐ.எஸ்.எப்) காலியாக உள்ள 540 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 19 செப்டம்பர் 2022, 5:02 pm IST
பகிர்:



இந்திய ராணுவத்தின் துணை ராணுவமான மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் ( சி.ஐ.எஸ்.எப்) காலியாக உள்ள 540 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 540

பணி:  உதவி ஆய்வாளர் (ஸ்டெனோகிராபர்) - 122
தகுதி : பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், சுருக்கெழுத்தில் நிமிடத்துக்கு 80 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

Advertisement

Advertisement

பணி: தலைமைக் காவலர் (மினிஸ்டெரியல்) - 418 
தகுதி: கணினியில் நிமிடத்துக்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 25.10.2022 தேதியின்படி 18 முதல் 2க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : திறன் தேர்வு, உடல் தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : cisfrectt.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிப்பதற்கான கடைசிநாள் : 25.10.2022

மேலும் விவரங்கள் அறிய  cisfrectt.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments