மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் பணிபுரிய தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில், சென்னை பகுதியில் பணிபுரிய காலியாக உள்ள பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பாலின சிறப்பு நிபுணர்
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.21,000
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Social Work-இல் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: கணக்கு உதவியாளர்
காலியிடம்: 1
சம்பளம்: ரூ.20,000
வயது: 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Accounts பிரிவில் டிப்ளமோ, இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: தகவல் தொழில்நுட்ப பணியாளர் மிஷன் சக்தி திட்டம்
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.20,000
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி அறிவுத்திறனும், 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: பல்நோக்கு உதவியாளர்(எம்டிஎஸ்)
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.12,000
வயது வரம்பு: 35 க்குள் இருக்க வேண்டும்.
தகுதி:குறைந்தது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://chennai.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை தெளிவாக பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 25.8.2025 தேதிக்குள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,செய்தி மக்கள். தொடர்பு அலுவலகம், சென்னை-01 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.