நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!
தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள குரூப் சி பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...
தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனம் என்பது நாட்டின் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனம். 1985 இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ஒரு மினரத்னா துணை நிறுவனம். தற்போது, இந்த நிறுவனத்தில் நிரப்பப்பட1,055 மைனிங் சிதார், துணை சர்வேயர், அசிஸ்டெண்ட் போர்மேன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களிடம் இருந்து மே 14 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: SECL/HR/MP/Recruitment/2026/166
பணி: Mining Sirdar T&S Grade-C
Advertisement
காலியிடங்கள்: 577
பணி: Dy. Surveyor T&S Grade – C (Mining)
காலியிடங்கள்: 43
பணி: Assistant Foreman (Electrical) Grade C
காலியிடங்கள்: 435
சம்பளம்: மாதம் ரூ.47,330
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 8.4.2026 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வும் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி அடிப்படையிலான தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினர் தவிர, இதர அனைத்து பிரிவினர் ரூ.1,180 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://secl-cil.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.5.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்ளுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.