கலாஷேத்ரா நாட்டியப் பள்ளியில் ஆசிரியர் பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.?
ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் குறித்து...
சென்னையில் உள்ள கலாஷேத்ரா நாட்டியப் பள்ளியின்கீழ் செயல்படும் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விபரம் வருமாறு:
பணி: Faculties
Advertisement
காலியிடங்கள்: 9
தகுதி: தமிழ் பாடப்பிரிவிற்கு-தமிழ் பாடப்பிரிவில் இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்று 5 ஆண்டுகள் ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதர பாடப்பிரிவுகளுக்கு சம்மந்தப்பட்ட இசை, நடன பாடப்பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்து 5 ஆண்டுகள் ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : தமிழாசிரியர் பணிக்கு ரூ.15,000 - ரூ.20,000. இதர பணிகளுக்கு ரூ.20,000 - ரூ.36,000
வயதுவரம்பு: அனைத்து பணிகளுக்கும் 60 வயதிற்குள் இருக்க
தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு பற்றிய விபரம் பின்னர் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.kalakshetra.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director, Kalakshetra Foundation, Tiruvanmiyur, Chennai - 600 041.