முகப்பு
வேலைவாய்ப்பு

கலாஷேத்ரா நாட்டியப் பள்ளியில் ஆசிரியர் பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.?

ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் குறித்து...

கலாஷேத்ரா நாட்டியப் பள்ளியில் ஆசிரியர் பணி - கலாஷேத்ரா
பகிர்:

சென்னையில் உள்ள கலாஷேத்ரா நாட்டியப் பள்ளியின்கீழ் செயல்படும் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விபரம் வருமாறு:

பணி: Faculties

Advertisement

காலியிடங்கள்: 9

தகுதி: தமிழ் பாடப்பிரிவிற்கு-தமிழ் பாடப்பிரிவில் இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்று 5 ஆண்டுகள் ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதர பாடப்பிரிவுகளுக்கு சம்மந்தப்பட்ட இசை, நடன பாடப்பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்து 5 ஆண்டுகள் ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : தமிழாசிரியர் பணிக்கு ரூ.15,000 - ரூ.20,000. இதர பணிகளுக்கு ரூ.20,000 - ரூ.36,000

வயதுவரம்பு: அனைத்து பணிகளுக்கும் 60 வயதிற்குள் இருக்க

தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு பற்றிய விபரம் பின்னர் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.kalakshetra.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Director, Kalakshetra Foundation, Tiruvanmiyur, Chennai - 600 041.

summary

Applications invited for the various faculty position on contract basis...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.