28.4.1976: சென்னை மத்திய சிறையை வேறு இடத்துக்கு மாற்ற முயற்சி
சென்னை மத்திய சிறையை வேறு இடத்துக்கு மாற்றும் முயற்சி பற்றி...
செங்கல்பட்டு, ஏப். 27- சென்னை மத்திய சிறையை நகருக்கு வெளியே மாற்ற ஏற்ற தொரு இடத்தை தெரிந்தெடுக்க அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது.
மாமல்லபுரம் அருகே ஒரு கிராமத்திலுள்ள 100 ஏக்கர் நிலம் அதற்கு ஏற்ற இடம் என்று யோசனை கூறப்படவே, அந்த இடத்தை சிறைகள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் நேற்று பார்வையிட்டார்.
விரைவில் இந்தியா - பாக். பேச்சு - உயர் அதிகாரிகள் மட்டத்தில் நடக்கும்
புது டில்லி. ஏப். 27 - விமானப் போக்குவரத்து (ஒரு நாட்டின் விமானங்கள் மற்றொரு நாட்டின்மீது பறப்பது உள்பட) ரயில், சாலை போக்குவரத்துகள் ஆகியவைகளை ஏற்படுத்துதல், மீண்டும் தூதுவ உறவைப் புதுப்பித்தல் ஆகிய விஷயங்களில் உடன்படிக்கைகள செய்து கொள்வதற்காக இந்தியாவும் பாகிஸ்தானும் மிக விரைவில் பேச்சுக்கள் நடத்தும்.
Advertisement
இஸ்லாமாபாத்தில், அநேகமாக வெளிநாட்டுச் செயலாளர்கள் மட்டத்தில், இந்தப் பேச்சு நடைபெறும்.
இந்தப் பேச்சுக்கள் பற்றிய விவரங்களை முடிவு செய்வதற்காக இரு நாடுகளின் வெளிநாட்டு செயலாளர்களும் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு முன்பு, கடந்த ஆண்டு மே மாதம் டில்லியில் இந்தியா, பாகிஸ்தான் பேச்சு நடந்தது. ஒரு நாட்டின் விமானங்கள் மற்றொரு நாட்டின் மீது பறப்பது பற்றித்கான் முக்கியமாக அந்தப் பேச்சு நடந்தது.
ஆனால் விமானங்கள் பறப்பது பற்றி எந்தவிதமான உடன்பாடும் ஏற்படாமலேயே அந்தப் பேச்சு முடிவடைந்தது. சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பின் முன்பு, தான் தொடுத்திருந்த வழக்கை வாபஸ் பெறப் பாகிஸ்தான் மறுத்ததே அந்தப் பேச்சு தோல்வியுற்றதற்குக் காரணம்.
ஆனால் கடந்த மார்ச் 27 தேதியன்று பாகிஸ்தான் பிரதமர் பூட்டோ, இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கு எழுதிய ஒரு கடிதத்தில், அந்த வழக்கை வாபஸ் பெறப் பாகிஸ்தான் தயாராய் இருப்பதாகக் கூறினார்.
அதன் பேரில் மீண்டும் இரு நாடுகளுக்குமிடையே அதிகாரி கள் மட்டத்தில் பேச்சு நடத்தத் தயாராய் இருப்பதாக ஏப்ரல் 11ம் தேதியன்று இந்திரா காந்தி பூட்டோவுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அதற்கு ஏப்ரல் 18ந் தேதியன்று பூட்டோ அனுப்பிய பதிலில், பாரதப் பிரதமர் யோசனைக்கு சம்மதம் தெரிவித்தார். ...