உணவே மருந்து

பசியின்மை, வயிற்று வலி மற்றும் வாயுக் கோளாறுகளை நீக்கி ஜீரண சக்தியை சீராக்கும் பொடி

புதினா இலையை நன்கு ஆய்ந்து உலர்த்தி  எடுத்துக் கொண்டு அதனுடன் மேற்கூறிய பொருட்களை எல்லாம் சேர்த்து ஒன்றாக்கி தூளாக்கி வைத்துக் கொள்ளவும்.

கோவை பாலா

புதினா பொடி
 
தேவையான பொருட்கள்

புதினா இலை (உலர்ந்தது) - 150 கிராம்
மிளகு - 15 கிராம்
சீரகம் - 15 கிராம்
சோம்பு - 15 கிராம்
மஞ்சள் - 10 கிராம்

செய்முறை : புதினா இலையை நன்கு ஆய்ந்து உலர்த்தி  எடுத்துக் கொண்டு அதனுடன் மேற்கூறிய பொருட்களை எல்லாம் சேர்த்து ஒன்றாக்கி தூளாக்கி வைத்துக் கொள்ளவும்.

பயன்கள் : இந்த பொடியை தினமும் காலை மாலை என இருவேளையும் தலா ஒரு ஸ்பூன் அளவு  சாப்பிட்டு வந்தால் பசியின்மை, ருசியின்மை, வயிற்று வலி மற்றும் வாயுக் கோளாறுகளை சீராக்கி ஜீரண சக்தியை முறைப்படுத்தும்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோதையாறு வனப் பகுதியில் உயிரிழந்த ராதாகிருஷ்ணன் யானை

மாா்த்தாண்டம் அருகே விபத்தில் தம்பதி காயம்

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

சாலைகளை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் மறியல்

தாமிரவருணியில் 2ஆவது நாளாக வெள்ளம்! மக்கள் குளிக்க கட்டுப்பாடு

SCROLL FOR NEXT