மிசோரமில் நிலச்சரிவு: 10 பேர் சாவு
மிசோரம் மாநிலத்தில் பெய்த பலத்த மழை மற்றும் நிலச்சரிவினால் 5 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.
மிசோரம் மாநிலத்தில் பெய்த பலத்த மழை மற்றும் நிலச்சரிவினால் 5 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.
தலைநகர் அய்சாலின் லய்புய்ட்லங் பகுதியில் பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து சனிக்கிழமை காலை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 9 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேரைக் காணவில்லை. இவர்கள் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அய்சால் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவினால் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சாலைகளில் தடைகள் ஏற்பட்டுள்ளதால்
போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
புயலினால், மின்சேவை மற்றும் தொலைத் தொடர்பு சேவை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. அசாம்: அசாம் மாநிலம், குவாஹாட்டியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பெண் ஒருவர் காயமடைந்தார். பல வீடுகள் சேதமடைந்தன. குடியிருப்புப் பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.