"தினமணி' தில்லிப் பதிப்பு 3-ஆம் ஆண்டுத் தொடக்கவிழா
ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு திருவள்ளூர் வி. பார்த்தசாரதி மற்றும் பரத் ஸ்ரீராம் வழங்கும் வயலின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM
ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு திருவள்ளூர் வி. பார்த்தசாரதி மற்றும் பரத் ஸ்ரீராம் வழங்கும் வயலின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு "தினமணி' நாளிதழின் தில்லிப் பதிப்பு மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நடைபெறுகிறது. இதையொட்டி "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் தில்லிவாழ் "தினமணி' வாசகர்களுக்கு நன்றி கூறி சிறப்புரையாற்றுவார். இந்த நிகழ்ச்சியில் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
அதைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் "தினமணி' நாளிதழின் சார்பில் கெüரவிக்கப்படுவார்கள்.