முதல் சிஆர்பிஎஃப் பெண் கமாண்டோ படை தொடக்கம்
தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் உதவுவதற்காக மத்திய ரிசர்வ் போலீஸ் பட்டாலியனில் (சி.ஆர்.பி.எஃப்) முதன்முதலாக பெண்கள் கமாண்டோ பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் உதவுவதற்காக மத்திய ரிசர்வ் போலீஸ் பட்டாலியனில் (சி.ஆர்.பி.எஃப்) முதன்முதலாக பெண்கள் கமாண்டோ பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, பஞ்சாப், ராஜஸ்தான், கர்நாடகம், உத்தரபிரதேசம், பிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முப்பது பெண்கள் இப்பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.
குர்கானுக்கு அருகே கதர்பூரில் உள்ள சிபிஆர்எஃப் பயிற்சி மையத்தில் இந்தப் படையினரின் சாகச நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
Advertisement
Advertisement
தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ளவர்களைக் காப்பாற்றுதல், தீவிரவாதிகளை குறி பார்த்துச் சுடுதல், கயிறுகளைப் பயன்படுத்தி தீவிரவாதிகளின் இருப்பிடத்தை அடைதல், மறைந்திருந்து கொரில்லா தாக்குதல் நடத்துதல் முதலானவற்றுக்கான ஒத்திகையை அவர்கள் செய்து காட்டினர்.
முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ள சிஆர்பிஎஃப். பைப் பேண்டு குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பெண் கமாண்டோக்களின் சாகச செயல்களைப் பாராட்டி அவர்களுடன் படம் எடுத்துக் கொண்டு, சிஆர்பிஎஃப் இயக்குநர் ஜெனரல் பிரணாய் சாஹே பேசியதாவது:
சிஆர்பிஎஃப் பெண்கள் கமாண்டோ பிரிவு தொடங்கப்பட வேண்டும் என்பது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் விருப்பமாகும். அவரது எண்ணம் இப்போது நிறைவேறி உள்ளது.
துடிப்பும், வீரமும் உள்ள பெண் கமாண்டோக்களுக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மூன்று மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் நாட்டின் மீது விசுவாசம் உள்ளவர்களாக, தைரியசாலிகளாக, அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர்களாக இருக்கின்றனர் என்றார் அவர்.
"நாட்டில் எங்கெல்லாம் மோதல் ஏற்படுகிறதோ, அங்கு உடனடியாக இந்தப் படையினர் அனுப்பப்படுவர்' என்று சிஆர்பிஎஃப் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.