வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளம்: காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு சோனியா காந்தி உத்தரவு
வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை அளிக்க வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை அளிக்க வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
கடுமையான மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநில மக்களுக்கு உதவும் வகையில் சோனியா இவ்வாறு கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.
காங்கிரஸ் தகவல்தொடர்பு பிரிவு தலைவர் அஜய் மக்கான் இது தொடர்பாகக் கூறியுள்ளது: கட்சியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.10 லட்சத்தை உத்தரகண்ட் வெள்ள நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டுமென்று சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் சார்பில் டேராடூனில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் கட்டுபாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் சஞ்சய் கபூர், காங்கிரஸ் சேவா தள தலைவர் மகேந்திர ஜோஷி ஆகியோர் அங்கு சென்று நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். உத்தரகண்ட் மாநிலத்துக்கு உடனடியாக நிவாரணப் பொருள்களை வழங்கி உதவ வேண்டுமென்று அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அஜய் மக்கான் கூறினார்.