நீலகிரி எச்பிஎஃப் தொழிற்சாலையின் எஞ்சிய ஊழியர்களுக்கும் 'விஆர்எஸ்': மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
நீலகிரியில் உள்ள ஹிந்துஸ்தான் ஃபோட்டோ ஃபிலிம் நிறுவனத்தின் எஞ்சிய ஊழியர்களுக்கும் விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
நீலகிரியில் உள்ள ஹிந்துஸ்தான் ஃபோட்டோ ஃபிலிம் நிறுவனத்தின் எஞ்சிய ஊழியர்களுக்கும் விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
இதுதொடர்பாக மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் கே.ஆர். அர்ஜுனன் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய கனரக தொழில் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ மாநிலங்களவையில் வியாழக்கிழமை அளித்த பதில் விவரம்:
ஹிந்துஸ்தான் ஃபோட்டோ ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம், மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. 2013 ஏப்ரலில் இருந்து எச்பிஎஃப் நிறுவனத்தில் உற்பத்தி ஏதும் இல்லை.
இந்த நிறுவனத்திற்கு புத்துயிரூட்ட கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகள் தோல்விடைந்துவிட்டன. இந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு தேசிய சம்பள விகிதத்தில் விருப்ப ஓய்வு அளிக்க சிசிஇஏ கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 30.06.2016 வரை 466 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டது. எனினும், 165 ஊழியர்கள் விஆர்எஸ்ஸுக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை அல்லது தகுதியான மனுக்களை அளிக்கவில்லை. இதனால், அவர்களுக்கு விஆர்எஸ் வழங்கப்படவில்லை.
தற்போது நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி எஞ்சியுள்ள ஊழியர்களுக்கும் விஆர்எஸ் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.