முகப்பு
இந்தியா

குஜராத் தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்த சிறுத்தை

குஜராத் தலைமைச் செயலகத்தில் சிறுத்தை நுழைந்த விடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 5 நவம்பர் 2018, 3:10 pm IST
பகிர்:

குஜராத் தலைமைச் செயலகத்தில் சிறுத்தை நுழைந்த விடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத் மாநிலம், காந்திநகரில் அம்மாநில தலைமைச்செயலகம் அமைந்துள்ளது. இங்கு இன்று அதிகாலை 2 மணியளவில் சிறுத்தை ஒன்று புகுந்தது. இது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

அதில் சிறுத்தை தலைமைச் செயலகத்தின் முன்பக்க உள்ள இரும்புக் கதவின் கீழ்பகுதி வழியாக உள்ளே நுழைகிறது. இதையடுத்து அங்கு 100க்கும் மேற்பட்ட காவலர்கள் தடுப்பு வேலிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

மேலும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பாக கூண்டு வரவழைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் யாரும் தலைமைச் செயலகத்திற்குள் இன்று அனுமதிக்கப்படவில்லை.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments