இந்தியா

பிரதமர் மோடி தீபாவளிப் பண்டிகையை எங்கே கொண்டாடப்போகிறார் தெரியுமா?

தீப ஒளிகளின் பண்டிகையான தீபாவளிப் பண்டிகையை பிரதமர் நரேந்திர மோடி புகழ்பெற்ற கேதார்நாத்தில் கொண்டாட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ANI


புது தில்லி: தீப ஒளிகளின் பண்டிகையான தீபாவளிப் பண்டிகையை பிரதமர் நரேந்திர மோடி புகழ்பெற்ற கேதார்நாத்தில் கொண்டாட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை ராணுவ வீரர்களுடன், பாதுகாப்புப் படை வீரர்களுடன், சியாச்சினில் என நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் கொண்டாடி வருகிறார்.

கடந்த ஆண்டு பிஎஸ்எஃப் படை வீரர்களுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போராவில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடிய மோடி, பிறகு கேதார்நாத் சென்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

2016ம் ஆண்டு இமாச்சலில், இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார் மோடி.

2015ம் ஆண்டு அமிருதசரஸில் உள்ள காஸாவில் டோக்ராய் போர் நினைவிடத்தில் தீபாவளியைக் கொண்டாடினார்.

2014ம் ஆண்டு சியாச்சினில் உள்ள ராணுவ முகாமுக்கு திடீர் வருகை அளித்த மோடி, உலகின் மிக உயரமான போர்ப் பகுதியில் தீபாவளியைக் கொண்டாடினார்.

இந்த ஆண்டு நாளைய தினம் தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

SCROLL FOR NEXT