கோப்புப் படம். 
இந்தியா

ஹாத்ரஸ் வன்கொடுமை வழக்கு சிபிஐக்கு மாற்றம்

ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றி அம்மாநில முதல் யோகி ஆதித்தியநாத் உத்தரவிட்டுள்ளார். 

DIN

ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றி அம்மாநில முதல் யோகி ஆதித்தியநாத் உத்தரவிட்டுள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தில் செப்டம்பா் 14-ஆம் தேதி தலித் பெண்ணை நான்கு இளைஞா்கள் கடத்தி கூட்டுபாலியல் வன்கொடுமை செய்தனா். நான்கு பேரில் ஒருவா் அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்தபோது, அவா் தனது நாக்கை கடித்ததால் துண்டானது.

பின்னா் அந்தப் பெண் பலத்த காயங்களுடன் மீடக்கப்பட்டு அலிகரில் உள்ள மருத்துவமனையில் கை, கால்கள் செயலிழந்த நிலையில் சிகிச்சை பெற்றாா். அதைத்தொடர்ந்து தில்லி சஃப்தா்ஜங் மருத்துவமனையில் மேல் சிகிச்சையில் இருந்தபோது செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்தாா். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் இந்த சம்பவத்தைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் நடைபெற்றன. இந்த நிலையில் ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு: 5 பேர் பலி; 14 பேர் படுகாயம்

கேரளத்தில் அமீபா தொற்றால் மூளை பாதிப்பு: நோயாளிகள் எண்ணிக்கை 18-ஆக உயர்வு!

பரிசுத்த மனம்... சோனம் பாஜ்வா!

Vijay பவுன்சர்கள் மீது தவெக தொண்டர்கள் புகார்! | செய்திகள்: சில வரிகளில் | 26.08.25

தீயான வியப்பு காத்திருக்கிறது... ஹரிஷ் கல்யாண் பகிர்ந்த டீசல் பட அப்டேட்!

SCROLL FOR NEXT