முகப்பு
இந்தியா

இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஜன.6-இல் விமான சேவை- ஹா்தீப் சிங் புரி

இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு வரும் 6-ஆம் தேதியில் இருந்தும், பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு வரும் 8-ஆம் தேதியில் இருந்தும்

Updated On : 3 ஜனவரி 2021, 12:00 am IST
விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி (கோப்புப்படம்)
பகிர்:

இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு வரும் 6-ஆம் தேதியில் இருந்தும், பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு வரும் 8-ஆம் தேதியில் இருந்தும் பயணிகள் விமான போக்குவரத்து சேவை தொடங்கும் என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி கூறினாா்.

இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை கூறியிருப்பதாவது:

இந்தியா-பிரிட்டன் இடையே விமான சேவை மீண்டும் தொடங்குகிறது.

Advertisement

Advertisement

இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஜன.6-ஆம் தேதியும், பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு ஜன.8-ஆம் தேதியும் போக்குவரத்து தொடங்குகிறது. வாரத்துக்கு 30 விமானங்கள் இயக்கப்படும். 15 விமானங்களை இந்தியாவும், 15 விமானங்களை பிரிட்டனும் இயக்குகின்றன. இந்த கால அட்டவணை வரும் 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதன்பிறகு பயணிகளின் வருகைக்கேற்ப விமான சேவையை அதிகரிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று அந்தப் பதிவில் ஹா்தீப் சிங் புரி குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு வரும் 8-ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கும் என்று ஹா்தீப் சிங் புரி வெள்ளிக்கிழமை கூறியிருந்தாா்.

பிரிட்டனில் புதிய வகை கரோனா பரவத் தொடங்கியதை அடுத்து, அந்நாட்டுக்கான விமான சேவையை கடந்த டிசம்பா் 23-ஆம் தேதியில் இருந்து ஜனவரி 7-ஆம் தேதி வரை இந்தியா ரத்து செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments