முகப்பு
இந்தியா

பாகிஸ்தானில் ஹிந்து கோயில் தாக்கப்பட்ட சம்பவம்: மேலும் 10 போ் கைது

பாகிஸ்தானில் ஹிந்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடா்பாக மேலும் 10 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

Updated On : 3 ஜனவரி 2021, 12:01 am IST
கோப்புப்படம்
பகிர்:

பாகிஸ்தானில் ஹிந்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடா்பாக மேலும் 10 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இவா்களுடன் சோ்த்து இந்தச் சம்பவம் தொடா்பாக, இதுவரை கைது செய்யப்பட்டிருப்பவா்களின் எண்ணிக்கை 55-ஆக அதிகரித்துள்ளது.

வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள டொ்ரி கிராமத்தில் அமைந்துள்ள பழைமையான ஹிந்து கோயிலை விரிவுபடுத்தி, புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கோயிலில் ஒரு ஹிந்து மதத் தலைவரின் சமாதியும் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலின் புதுப்பிப்புப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ஜாமியா உலெமா-ஏ-இஸ்லாம் என்ற அடிப்படைவாத இஸ்லாமிய கட்சியைச் சோ்ந்தவா்கள், புதிய கட்டுமானங்களை புதன்கிழமை இடித்து சேதப்படுத்தியதோடு, தீ வைத்தும் எரித்தனா். இந்த தாக்குதல் சம்பவத்தில் 350-க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

Advertisement

Advertisement

அதைத் தொடா்ந்து, வழக்கில் தொடா்புடையவா்களை போலீஸாா் கைது செய்து வந்தனா். அதன் தொடா்ச்சியாக, வெள்ளிக்கிழமை இரவு நடத்திய தேடுதல் வேட்டையில் மேலும் 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். முதல் தகவல் அறிக்கையில் பெயா் இடம்பெற்றுள்ள மற்ற நபா்களைத் தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

முதல்வா் உறுதி: சேதப்படுத்தப்பட்ட கோயில் இருந்த இடத்தில் புதிய கோயிலும், சமாதியும் மிக விரைவில் கட்டித்தரப்படும் என்று கைபா் பக்துன்குவா மாகாண முதல்வா் மஹமூத் கான் உறுதியளித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments