முகப்பு
இந்தியா

மயானத்தில் மேற்கூரை விழுந்து 19 பேர் பலி

உத்தரப் பிரதேசம் காசியாபாத் நகரில் மயானத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 19 பேர் பலியானதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On : 3 ஜனவரி 2021, 10:29 pm IST
பகிர்:


உத்தரப் பிரதேசம் காசியாபாத் நகரில் மயானத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 19 பேர் பலியானதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பழ வியாபாரி ஒருவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக சுமார் 50 பேர் முராத் நகர் பகுதியிலுள்ள மயானத்துக்குச் சென்றுள்ளனர். அப்போது மழை பெய்ததால், நிழல் தேடி புதிதாகக் கட்டப்பட்ட கட்டடத்தின் கீழ் அவர்கள் நின்றுள்ளனர். இந்த நிலையில் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

இதில் 19 பேர் பலியாகியுள்ளதாகவும், 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 3 உடல்களை மீட்ட நிலையில், மற்ற உடல்களை காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மீட்டனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை மாவட்ட ஆட்சியரே அறிவிப்பார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments