முகப்பு
இந்தியா

வேளாண் சட்டங்களை நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும்: சோனியா காந்தி

​வேளாண் சட்டங்களை நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

Updated On : 3 ஜனவரி 2021, 7:52 pm IST
கோப்புப்படம்
பகிர்:


வேளாண் சட்டங்களை நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

"மோடி அரசு தனது அதிகார ஆணவத்தைக் கைவிட்டு, மூன்று கருப்பு சட்டங்களையும் நிபந்தனையின்றி உடனடியாகத் திரும்பப் பெற்று குளிரிலும் மழையிலும் போராடும் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இதுவே ராஜ தர்மமாக இருக்க முடியும். உயிரிழந்த விவசாயிகளுக்கும் இது உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

Advertisement

Advertisement

விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள அரசு தயக்கம் காட்டுவதால் இதுவரை 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

சுதந்திரத்துக்குப் பிறகு முதல்முறையாக ஈகோ நிறைந்த அரசு ஆட்சிக்கு வந்துள்ளது. நாட்டு மக்களுக்கு உணவளிப்பவர்களின் போராட்டத்தையும் வேதனையையும் இவர்களால் புரிந்துகொள்ள முடியாது."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments