முகப்பு
இந்தியா

கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கும் என நம்புகிறோம்: விவசாயிகள்

தில்லியில் கடும் குளிருக்கு மத்தியில் தொடர்ந்து போராடி வரும் எங்களது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கும் என்று நம்புவதாக  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On : 3 ஜனவரி 2021, 11:11 am IST
கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கும் என நம்புகிறோம்: விவசாயிகள்
பகிர்:

தில்லியில் கடும் குளிருக்கு மத்தியில் தொடர்ந்து போராடி வரும் எங்களது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கும் என்று நம்புவதாக  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட எல்லைகளை சேர்ந்த விவசாயிகள் கடந்த 38-நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட 6 பேச்சுவார்த்தைகளில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு முழு உடன்பாடு தெரிவிக்காததால், நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

இதனிடையே நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் மத்திய அரசு எங்களது கோரிக்கைகளை ஏற்கும் என்று நம்புவதாக தில்லி காஸியாபாத் எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் பேசியதாவது, எங்கள் குடும்ப உறுப்பினர்களை பிரிந்து கடும் குளிருக்கு மத்தியில் சாலைகளில் நாங்கள் அமர்ந்து போராடி வருகிறோம். குளிரில் பலரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது.

எனினும் போராட்டத்தை மனவுறுதியுடன் தொடர்ந்து நடத்தி வருகிறோம். நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் மத்திய அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் என நம்புகிறோம் என்று கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments