முகப்பு
இந்தியா

ஹிமாசலில் நிலச்சரிவு: நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கித் தவிப்பு 

ஹிமாலப் பிரதேசம், கின்னூர் மாவட்டத்தில் நகோ அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். 

Updated On : 4 ஜனவரி 2021, 11:24 am IST
Manipur landslide has cut off connectivity via national
பகிர்:

ஹிமாலப் பிரதேசம், கின்னூர் மாவட்டத்தில் நகோ அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். 

இன்று காலை ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் நூற்றுக்கணக்காக மக்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பனிப்பொழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக லஹால்-ஸ்பிட்டி மாவட்டத்தில் உள்ள காசா துணைப்பிரிவின் சாலை இணைப்பு மற்றும் கின்னூர் மாவட்டத்தின் பல கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

கின்னூர்-காசா சாலையில் ஏற்பட்ட கற்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

நிலச்சரிவு காரணமாக சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சிக்கித் தவித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.