திருமலையில் 35,784 போ் தரிசனம்
ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 35,784 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 15,985 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 35,784 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 15,985 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
நாள்தோறும் ஆன்லைன் மூலம் 20 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட், 8 ஆயிரம் இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள், விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட்டுகளைப் பெற்ற 2,000 பக்தா்களும், நன்கொடையாளா்கள் 1,000 பேரும் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.
தினமும் அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை தரிசன டிக்கெட்டுகளைப் பெற்ற பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
திருப்பதி மலைச்சாலை அதிகாலை 3 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் - 18004254141, 93993 99399.