முகப்பு
இந்தியா

மெட்ரோவில் பயணிக்க இ-பாஸ் கட்டாயமில்லை: மேற்கு வங்கம்

மெட்ரோவில் பயணிக்க வரும் 18-ஆம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயமில்லை என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

Updated On : 13 ஜனவரி 2021, 4:46 pm IST
மெட்ரோவில் பயணிக்க இ-பாஸ் கட்டாயமில்லை: மேற்கு வங்கம் (கோப்புப்படம்)
பகிர்:

மெட்ரோவில் பயணிக்க வரும் 18-ஆம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயமில்லை என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

மேலும் வார நாள்களில் மெட்ரோ ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் மேற்கு வங்க மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா ஊரடங்கு காரணமாக மெட்ரோ உள்ளிட்ட ரயில் சேவைகளுக்கு மேற்கு வங்கத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

கரோனா பரவும் விகிதம் குறைந்து வருவதற்கேற்ப மத்திய அரசு வழிகாட்டுதலின்படி மாநில அரசுகள் தளர்வுகளை அறிவித்து வருகிறது.

அந்தவகையில் மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 14-ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. கரோனா நெறிமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வரும் 18-ஆம் தேதி முதல் மெட்ரோவில் பயணிக்க இ-பாஸ் கட்டாயமில்லை என்று மேற்கு வங்க மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

வார நாள்களில் மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும், படிப்படியாக அனைத்து வயதினரும் பயணிக்க அனுமதியளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments