மகாராஷ்டிரத்தில் மேலும் 382 பறவைகள் பலி
மகாராஷ்டிரத்தில் வியாழக்கிழமை மட்டும் 382 பறவைகள் பலியானதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் வியாழக்கிழமை மட்டும் 382 பறவைகள் பலியானதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுபற்றி அரசு தெரிவித்தது:
"இன்று மொத்தம் 382 பறவைகள் பலியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து, அவற்றின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி 8 முதல் இதுவரை மொத்தம் 3,378 பறவைகள் பலியாகியுள்ளன. மாநிலத்தில் இதுவரை 9 மாவட்டங்கள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன."
Advertisement
Advertisement
தில்லி, மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.