முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் டிரக்-டெம்போ மோதி கோர விபத்து: 11 பேர் பலி

கர்நாடக மாநிலம் தர்வாத் அருகே இன்று காலை டிரக் - டெம்போ மோதிய கோர விபத்தில் 11 பேர் பலியாகினர்.

Updated On : 15 ஜனவரி 2021, 11:36 am IST
கர்நாடகத்தில் டிரக்-டெம்போ மோதி கோர விபத்து: 11 பேர் பலி
பகிர்:


தர்வாத்: கர்நாடக மாநிலம் தர்வாத் அருகே இன்று காலை டிரக் - டெம்போ மோதிய கோர விபத்தில் 11 பேர் பலியாகினர்.

ஹுப்பள்ளி - தர்வாத் பைபாஸ் சாலையில் தர்வாத் நகருக்கு 8 கி.மீ. தொலைவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. இந்த விபத்தில் டெம்போவில் வந்த 10 பெண்கள் மற்றும் அதன் ஓட்டுநர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்து கேஐஎம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாவாங்கேர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கோவாவில் நடைபெறும் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க டெம்போவில் சென்ற போது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த டிரக் மீது மோதியதில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

Advertisement

Advertisement

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments