முகப்பு
இந்தியா

பூபேந்திர படேல் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் மாலை கூடுகிறது

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளதாக குஜராத் முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Updated On : 16 செப்டம்பர் 2021, 2:17 pm IST
கோப்புப்படம்
பகிர்:


குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளதாக குஜராத் முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கடந்த சனிக்கிழமை ராஜிநாமா செய்தார். இதைத் தொடர்ந்து, புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டார். மாநிலத்தின் 17-வது முதல்வராக அவர் கடந்த திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். மாநில அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர்கள் பின்னர் பதவியேற்றுக் கொள்வார்கள் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், புதிய அமைச்சர்கள் இன்று (வியாழக்கிழமை) பதவியேற்கின்றனர். ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

இதனிடையே, பூபேந்திர படேல் தலைமையிலான புதிய அமைச்சரவைக் கூட்டம் மாலை 4.30 மணிக்கு காந்திநகரில் நடைபெறவுள்ளதாக அந்த மாநில முதல்வர் அலுவலகம் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments