ஓ. பன்னீர்செல்வத்திடம் ஆதரவு கோரினார் திரௌபதி முர்மு
தில்லி சென்றுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை, தில்லியில் உள்ள இல்லத்தில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று மாலை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.
தில்லி சென்றுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை, தில்லியில் உள்ள இல்லத்தில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று மாலை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.
பல்வேறு அரசியல் பிரச்னைகள் காரணமாக, புது தில்லி சென்றிருக்கும் ஓ. பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கும் வேட்பாளர் திரௌபதி முர்மு, ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.
Advertisement
Advertisement
இதையும் பார்க்க.. வேட்புமனுத் தாக்கல் செய்தார் திரௌபதி முர்மு - புகைப்படங்கள்
இந்த சந்திப்பின்போது, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்தும் உடன் இருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.