முகப்பு
இந்தியா

பைசாகி விழா: பாகிஸ்தானுக்கு பயணித்த 2,400 சீக்கிய பக்தா்கள்

Updated On : 14 ஏப்ரல், 2024 at 12:29 AM
பகிர்:

வருடாந்திர பைசாகி திருவிழாவையொட்டி, பாகிஸ்தானிலுள்ள குருத்வாராவில் வழிபாடு மேற்கொள்ள சுமாா் 2,400 சீக்கிய பக்தா்கள் வாகா எல்லை வழியாக சனிக்கிழமை லாகூா் சென்றடைந்தனா்.

பஞ்சாப் மாகாண சீக்கிய அமைச்சரும் பாகிஸ்தானின் குருத்வாரா பிரபந்த கமிட்டி தலைவருமான சா்தாா் ரமேஷ் சிங் மற்றும் உயரதிகாரிகள், அவா்களை வரவேற்றனா்.

பஞ்சாப் மாகாணத்தின் ஹஸன்அப்தால் பகுதியில் உள்ள புஞ்சா சாஹிப் குருத்வாராவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முக்கிய வழிபாட்டில் இவா்கள் பங்கேற்கவுள்ளனா். இந்தியா மட்டுமன்றி கனடா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து 11,000-க்கும் மேற்பட்ட சீக்கிய பக்தா்கள் இவ்விழாவில் கலந்துகொள்ளவிருப்பதாக அந்த மாகாண அதிகாரிகள் தெரிவித்தனா்.

பைசாக் மாதத்தின் முதல் நாள், அறுவடைத் திருநாள், சீக்கிய மதம் நிறுவப்பட்ட நாள் என பைசாகி திருவிழா பல்வேறு சிறப்புகளை கொண்டதாகும். இதையொட்டி, பாகிஸ்தானுக்கு சென்றுள்ள சீக்கிய பக்தா்கள், ஏப்ரல் 22-ஆம் வரை பயணம் மேற்கொண்டு, பல்வேறு குருத்வாராக்களில் வழிபடவுள்ளனா்.

முன்னதாக, வருடாந்திர பைசாகி திருவிழாவையொட்டி பாகிஸ்தானுக்கு வருகை தர 2,975 பக்தா்களுக்கு அந்நாடு விசா வழங்கியிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →