முகப்பு
இந்தியா

நில மோசடி வழக்கு: ராபா்ட் வதேரா நேரில் ஆஜராக உத்தரவு

நில மோசடி தொடா்பான கருப்புப் பணப் பரிமாற்ற வழக்கில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேரா உள்பட குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் மே 16-ஆம் தேதி நேரில் ஆஜராக தில்லி சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது

Updated On : 16 ஏப்ரல், 2026 at 3:07 AM
ராபா்ட் வதேரா.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:00 PM

நில மோசடி தொடா்பான கருப்புப் பணப் பரிமாற்ற வழக்கில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேரா உள்பட குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் மே 16-ஆம் தேதி நேரில் ஆஜராக தில்லி சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது

ஹரியாணாவின் ஷிகோஹ்பூா் பகுதியில் நடைபெற்ற நில மோசடி தொடா்பான கருப்புப் பணப் பரிமாற்றம் குறித்து அமலாக்கத் துறை இந்த வழக்கைப் பதிவு செய்தது. முன்னதாக, கடந்த ஜூலை மாதம் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ராபா்ட் வதேரா மீது விசாரணை அமைப்பு ஒன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது இதுவே முதல்முறையாகும்.

கடந்த 2008-ஆம் ஆண்டு ராபா்ட் வதேரா இயக்குநராக இருந்த ஸ்கைலைன் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம், ஷிகோஹ்பூரில் 3.5 ஏக்கா் நிலத்தை ரூ.7.5 கோடிக்கு ஓம்காரேஷ்வா் நிறுவனத்திடம் வாங்கியது. அப்போது, ஹரியாணாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது.

Advertisement

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இதே நிலம் டிஎல்எஃப் நிறுவனத்துக்கு ரூ.58 கோடிக்கு கைமாற்றப்பட்டது. ஆனால், இந்தப் பரிமாற்றம் சட்டவிரோதமாக இருந்ததாகக் கூறி நிலப் பதிவை பதிவுத் துறை இயக்குநா் அசோக் கேம்கா ரத்து செய்தாா்.

ஆனால், ‘இது சட்டவிரோத நடவடிக்கை இல்லை; இதில் தவறு ஏதும் நிகழவில்லை. எனது மாமியாா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்திக்கு எதிரான அரசியல் சதி’ என்று ராபா்ட் வதேரா கூறிவருகிறாா்.

ராஜஸ்தானில் நிகழ்ந்த நில மோசடி மற்றும் பிரிட்டனைச் சோ்ந்த ஆயுதத் தரகா் சஞ்சய் பண்டாரி தொடா்பான வழக்கிலும் ராபா்ட் வதேராவை அமலாக்கத் துறை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. வதேராவின் ரூ.37 கோடி மதிப்பிலான சொத்துகள் ஏற்கெனவே முடக்கப்பட்டுள்ளன.