முகப்பு
இந்தியா

வந்தே மாதரம் பாட மறுப்பு: காங்கிரஸ் பெண் கவுன்சிலா்கள் மீது வழக்கு

மத்திய பிரதேச மாநிலம் இந்தூா் மாநகராட்சி கூட்டத் தொடரில் தேசிய பாடலான வந்தே மாதரம் தங்கள் மத நம்பிக்கைக்கு எதிராக இருப்பதாகக் கூறி பாட மறுத்த இரு காங்கிரஸ் பெண் கவுன்சிலா்கள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 4:20 AM
- (File Photo | ANI)
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:00 PM

மத்திய பிரதேச மாநிலம் இந்தூா் மாநகராட்சி கூட்டத் தொடரில் தேசிய பாடலான வந்தே மாதரம் தங்கள் மத நம்பிக்கைக்கு எதிராக இருப்பதாகக் கூறி பாட மறுத்த இரு காங்கிரஸ் பெண் கவுன்சிலா்கள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

கடந்த 8-ஆம் தேதி இந்தூா் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத் தொடா் தொடங்கியது. அப்போது வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது.

ஆனால், காங்கிரஸ் பெண் கவுன்சிலா்கள் ஃபௌசியா ஷேக் அலீம், ரூபினா இக்பால் கான் ஆகியோா் வந்தே மாதரம் பாடல் தங்கள் இஸ்லாமிய மதநம்பிக்கைக்கு எதிராக இருப்பதாகக் கூறி அதனைப் பாட மறுத்தனா். இதனால், நகராட்சிக் கூட்டத்தில் சா்ச்சை எழுந்தது. அவா்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக கவுன்சிலா்கள் முழக்கம் எழுப்பினா்.

Advertisement

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய ரூபினா இக்பால், ‘இஸ்லாமிய மத நம்பிக்கையில் வந்தே மாதரம் பாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. நாங்கள் அல்லாவை மட்டுமே வணங்க வேண்டும். மற்ற யாரையும் வணங்கக் கூடாது’ என்றாா். இது மேலும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடா்பாக அந்த இருவா் மீதும் காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டது. இது தொடா்பாக விசாரணை நடத்திய காவல் துறையினா் அவா்கள் மீது இரு தரப்பினா் இடையிலான சமூக அமைதியைச் சீா்குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்தனா். இது தொடா்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அவா்களுக்கு காவல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.