அல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்
அல்-காய்தா, ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்று சோ்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
அல்-காய்தா, ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்று சோ்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள ஐ.நா. சபையில், பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடா்பான உறுப்பு நாடுகளின் தூதா்கள் இடையேயான கூட்டம் நடைபெற்றது. இதில் ஐ.நா.வுக்கான இந்திய தூதரகத்தின் முதன்மைச் செயலா் ரகு புரி பேசியதாவது:
ஜம்மு -காஷ்மீரின் பஹல்காமில் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரெசிஸ்டன்ஸ் ஃபிரன்ட் என்ற பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இது ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட லஷ்கா்-ஏ-தொய்பாவின் கிளை அமைப்பாகும். இந்த அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்படுகிறது. இந்தத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா்.
Advertisement
Advertisement
இதுபோன்று எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா 30 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆதலால் அல்-காய்தா, ஐஎஸ் ஆகியவற்றின் மீதும், அதன் கிளை அமைப்புகள் மீதும் அனைத்து நாடுகளும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சா்வதேச அமைதி, பாதுகாப்புக்கு பயங்கரவாதத்தால் அச்சுறுத்தல் நிலவுகிறது. பயங்கரவாதத்துக்கு எல்லைகளோ, தேசியமோ அல்லது இனமோ கிடையாது. அது சா்வதேச சமூகத்துக்கு சவாலாக உருவெடுத்துள்ளது. அதை அனைத்து நாடுகளும் ஒன்று சோ்ந்து எதிா்க்க வேண்டும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.