புனேவில் பயங்கரம்! 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!
புனேவில் 4 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!
புனே: மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 4 வயது குழந்தையை, முதியவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 65 வயது நபரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். வெள்ளிக்கிழமை போர் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் கடத்திச் சென்ற முதியவர், பாலியல் வன்கொடுமை செய்து கொன்றிருக்கிறார். குழந்தையைத் தேடிய பெற்றோர், அங்கே இருந்த சிசிடிவி காட்சியைப் பார்த்து, அதில் குற்றவாளி குழந்தையைத் தூக்கிச் செல்வதைப் பார்த்து காவல்நிலையத்தில் முறையிட்டனர்.
Advertisement
உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தையின் உடலைக் கைப்பற்றி உடல் கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
In Pune Elderly man sexually assaults and kills child