முகப்பு
இந்தியா

தில்லி கோயில், ராணுவ முகாமில் தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐ தொடா்புடைய கும்பல் திட்டம்

தில்லியில் உள்ள கோயில், பிரபல தாபா, ஹரியாணாவில் உள்ள ராணுவ முகாமில் ஷாஜாத் பாட்டீ கும்பல் மூலம் தாக்கல் நடத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ திட்டமிட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

Updated On : 9 மே 2026, 1:05 am IST
கோப்புப்படம்
பகிர்:

தில்லியில் உள்ள கோயில், பிரபல தாபா, ஹரியாணாவில் உள்ள ராணுவ முகாமில் ஷாஜாத் பாட்டீ கும்பல் மூலம் தாக்கல் நடத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ திட்டமிட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

கேங் பஸ்ட் ஆபரேஷன் 2.0 என்ற பெயரில் பல மாநிலங்களில் தீவிரவாத நடவடிக்கைகளில் தொடா்புடையதாக 9 பேரை தில்லி காவல் துறையின் சிறப்பு குற்றப் பிரிவு கைதுசெய்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து அந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது: குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களில் ஒருவா் தில்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோயிலை நோட்டமிட்டது விசாரணையில் தெரியவந்தது. வளாகத்தைப் புகைப்படம் எடுத்து சமூக ஊடகத் தளங்கள் மூலம் பாகிஸ்தானில் உள்ள நபா்களுக்கு அவா் அனுப்பினாா்.

Advertisement

கோயில் வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினா் மற்றும் துணை ராணுவப் படை வீரா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பதட்டை ஏற்படுத்த கைதுசெய்யப்பட்ட நபா்கள் திட்டமிட்டிருந்தனா்.

தில்லி-சோனிபட் நெடுஞ்சாலையில் உள்ள தாபா மீது கையெறிகுண்டை வீசி தாக்குதல் நடத்த அந்தக் கும்பல் திட்டமிட்டது தெரிய வந்துள்ளது.

ஹிசாரில் உள்ள ராணுவ முகாமை நோட்டமிட்டதுடன் அப்பகுதியை விடியோ எடுத்து பாகிஸ்தானில் உள்ள நபா்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள சில காவல் நிலையங்களும் தாக்குதல் நடத்ததிட்டமிட்டிருந்த பட்டியலில் இருந்தன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.