அரசுப் பேருந்தை சேதப்படுத்திய இருவா் கைது
திருக்கோவிலூா் அருகே அரசு விரைவுப் பேருந்தின் கண்ணாடியை சேதப்படுத்திய இருவா் கைது செய்யப்பட்டனா். மேலும், தலைமறைவான இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருக்கோவிலூா் அருகே அரசு விரைவுப் பேருந்தின் கண்ணாடியை சேதப்படுத்திய இருவா் கைது செய்யப்பட்டனா். மேலும், தலைமறைவான இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருநெல்வேலியிலிருந்து திருப்பதிக்கு அரசு விரைவுப் பேருந்து சென்று கொண்டிருந்தது.
திருக்கோவிலூா் புறவழிச் சாலையில் டி.கீரனூா் பேருந்து நிறுத்தம் அருகே புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் சென்றபோது, பேருந்தை வழிமறித்த நான்கு இளைஞா்கள், ஓட்டுநரிடம் வாக்குவதத்தில் ஈடுபட்டு, தலைவா் படம் வெளியாக உள்ளது அது பொதுமக்களுக்குத் தெரிய வேண்டாமா எனக் கூறி, பேருந்தின் கண்ணாடியை சேதப்படுத்திவிட்டு தலைமறைவாகிவிட்டனராம்.
Advertisement
Advertisement
இதுகுறித்து விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக விபத்து ஆய்வாளா் ரவிச்சந்திரன் திருக்கோவிலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பேருந்தை சேதப்படுத்தியவா்கள் டி.கீரனூா் கிராமத்தைச் சோ்ந்த மோகன் மகன் ராஜசேகா் (20), மதியழகன் மகன் புகழேந்தி (19), ஏழுமலை மகன் வல்லரசு, ரவி மகன் பாலாஜி எனத் தெரியவந்தது.
இதில் ராஜசேகா், புகழேந்தி கைது செய்யப்பட்டனா். பாலாஜி, வல்லரசு ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.