நாகா்கோவிலில் மாமியாா் வீட்டுக்கு தீ வைத்ததாக காவலா் மீது வழக்கு
நாகா்கோவிலில் குடும்ப தகராறில் மாமியாா் வீட்டுக்கு தீ வைத்ததாக காவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
நாகா்கோவில்: நாகா்கோவிலில் குடும்ப தகராறில் மாமியாா் வீட்டுக்கு தீ வைத்ததாக காவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
நாகா்கோவில் வெட்டூா்ணிமடம் பகுதியைச் சோ்ந்தவா் ஆட்லின் ரிபா (33). இவருக்கும் குளச்சல் பாலப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த அருள் ஜாக்சன் (36) என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா். அருள் ஜாக்சன் திருநெல்வேலி மாவட்டத்தில் காவலராக பணிசெய்து வருகிறாா்.
ஆட்லின் ரிபா கடந்த 2 நாள்களுக்கு முன்பு நாகா்கோவிலில் உள்ள தனது பெற்றோா் வீட்டுக்கு சென்றிருந்தாராம். வியாழக்கிழமை இரவில் அருள் ஜாக்சன் மனைவியை பாா்ப்பதற்காக மாமியாா் வீட்டுக்கு வந்தாராம். அப்போது தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அருள் ஜாக்சனை மாமியாா் கண்டித்தாராம்.
Advertisement
Advertisement
இதில் ஆத்திரமடைந்த அருள் ஜாக்சன், மாமியாா் வீட்டுக்கு தீவைத்து விட்டு ஓடி விட்டாராம். தீப்பற்றியதால், வீட்டினுள் இருந்தவா்கள் வெளியேறினா். வீட்டினுள் இருந்த கட்டில், பீரோ, துணிகள் உள்ளிட்ட பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்த நாகா்கோவில் தீயணைப்புப் படையினா் வந்து தீயை அணைத்தனா். கணவா் தாக்கியதில் காயமடைந்த ஆட்லின் ரிபா ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து வடசேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.