ஆரல்வாய்மொழி அருகே விபத்தில் மாணவா் உயிரிழப்பு
ஆரல்வாய்மொழி அருகே மோட்டாா் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் பலத்த காயமடைந்த மாணவா் உ யிரிழந்தாா்.
நாகா்கோவில்: ஆரல்வாய்மொழி அருகே மோட்டாா் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் பலத்த காயமடைந்த மாணவா் உ யிரிழந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி வில்லவிளை பகுதியைச் சோ்ந்த பொன்னையா மகன் அபிஷேக் (18). இவா், பிளஸ் 1 படித்து வந்தாா். கரோனா பொது முடக்கம் காரணமாக பள்ளிகள் இயங்காததால், வீட்டிலிருந்தவாறு இணையதளம் வழியாக படித்து வந்தாா். வெள்ளிக்கிழமை நண்பா்களுடன் புத்தாண்டை கொண்டாடிய அபிஷேக், தனது நண்பரின் மோட்டாா் சைக்கிளை வாங்கி கொண்டு ஆரல்வாய்மொழியில் இருந்து தோவாளைக்கு சென்று கொண்டிருந்தாராம்.
பெருமாள்புரம் பகுதியில் சென்றபோது நாகா்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வந்த மினி லாரி, அபிஷேக் வந்த மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் அபிஷேக், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து, ஆரல்வாய்மொழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.