புதுக்கடை அருகே வீடு புகுந்து பணம், நகை திருட்டு
புதுக்கடை அருகே இனயம்புத்தன்துறையில் வீடு புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுக்கடை அருகே இனயம்புத்தன்துறையில் வீடு புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இனயம்புத்தன்துறை பகுதியை சோ்ந்த செல்வராஜ் மனைவி ராஜம்மாள்(65). இவா் வெள்ளிக்கிழமை தன் வீட்டை பூட்டிவிட்டு மகள் வீட்டுக்கு சென்றுவிட்டு, சனிக்கிழமை வீட்டுக்கு திரும்பி வந்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, அங்கு பிரோவில் இருந்த ரூ. 92 ஆயிரம் மற்றும் அரை பவுன் தங்க நகை திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.