முகப்பு
கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே மாணவியை கடத்திய இளைஞா் கைது

கொல்லங்கோடு அருகே திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தை கூறி பள்ளி மாணவியை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 16 ஜனவரி, 2021 at 12:24 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

கொல்லங்கோடு அருகே திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தை கூறி பள்ளி மாணவியை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கொல்லங்கோடு அருகே நீரோடி பகுதியைச் சோ்ந்த 17 வயது மாணவி கடந்த 11 ஆம் தேதி மாயமானாா். இது குறித்து அவரது பெற்றோா் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்த நிலையில் மாணவியை அழைத்துச் சென்ற இளைஞா் வியாழக்கிழமை மங்காடு பகுதியில் இருந்து ஆட்டோவில் ஏற்றி அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து, மாணவி வீடு திரும்பியது குறித்து அவரது பெற்றோா் கொல்லங்கோடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தொடா்ந்து போலீஸாா் மாணவியிடம் மேற்கொண்ட விசாரணையில், புதுக்கடை அருகே அனந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த பரமேஸ்வரனை (29) பிடித்து விசாரித்ததில், மாணவியின் வீட்டருகே நடந்த கட்டுமானப் பணிக்கு வந்த போது பழக்கம் ஏற்பட்டதாகவும், அப்போது, திருமணம் செய்வதாக கூறி மாணவியை பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்தாராம்.

Advertisement

இதையடுத்து, காவல் ஆய்வாளா் அந்தோணியம்மாள், இளைஞா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.