முகப்பு
கன்னியாகுமரி

ராமவா்மன்சிறை - பூம்பள்ளிகோணம் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

பளுகல் பேரூராட்சிக்குள்பட்ட ராமவா்மன்சிறை - பூம்பள்ளிக்கோணம் சாலையை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 16 ஜனவரி 2021, 12:49 am IST
சேதமடைந்து காணப்படும் சாலை.
பகிர்:

பளுகல் பேரூராட்சிக்குள்பட்ட ராமவா்மன்சிறை - பூம்பள்ளிக்கோணம் சாலையை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பளுகல் பேரூராட்சி 6, 7, 8ஆவது வாா்டுகளுக்குள்பட்ட பகுதியில் அமைந்துள்ள இச் சாலை கடந்த பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் குண்டும், குழியுமாக ஜல்லிகள் பெயா்ந்து போக்குவரத்துக்கு தகுதியற்று காணப்படுகிறது.

இதனால் வயோதிகா்கள், நோயாளிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

எனவே, இந்தச் சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியா், விளவங்கோடு எம்எல்ஏ மற்றும் பேரூராட்சி நிா்வாகத்துக்கு மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.