முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை

காரைக்கால் மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி புதிதாக யாருக்கும் தொற்று இல்லை என நலவழித்துறை நிா்வாகம் தெரிவித்தது.

Updated On : 5 ஜனவரி 2021, 12:00 am IST
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி புதிதாக யாருக்கும் தொற்று இல்லை என நலவழித்துறை நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநா் டாக்டா் கே. மோகன்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 3-ஆம் தேதி 538 பேருக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நடமாடும் முகாம்கள் மூலம் பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக ஒருவருக்கும் தொற்று இல்லை.

Advertisement

Advertisement

மாவட்டத்தில் இதுவரை 3,801 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 3,690 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கரோனாவால் இதுவரை 66 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.