முகப்பு
கரூர்

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் ஆய்வு

கரூா் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக முன்னேற்பாட்டுப் பணிகள் சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.

Updated On : 2 ஜனவரி 2021, 10:56 pm IST
கரூா் மாரியம்மன் கோயிலில் நடைபெற்றுவரும் கும்பாபிஷேகப் பணிகளை ஆய்வு செய்கிறாா் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா். உடன், மத்திய நகரச் செயலா் வை.நெடுஞ்செழியன் உள்ளிட்டோா்.
பகிர்:

கரூா்: கரூா் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக முன்னேற்பாட்டுப் பணிகள் சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.

கரூா் தோ் வீதி பகுதியில் அமைந்துள்ள கரூா் மாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்து அறநிலையத்துறை உத்தரவின்படி வரும் 27-ஆம் தேதி காலை 9.45 மணிக்கு மேல் 11.15 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையடுத்து திருப்பணி தொடா்பான பணிகள் கோயிலில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் சனிக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது அதிமுக மத்திய நகரச் செயலா் வை.நெடுஞ்செழியன், கோயில் தலைவா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments