முகப்பு
குழந்தைகள் உலகம்

கரடியின் திமிர்...

கரடி ஒன்று வந்தது காக்கைக் கூட்டை கண்டது

Updated On : 28 ஜூன் 2026, 12:20 am IST
பகிர்:

கரடி ஒன்று வந்தது

காக்கைக் கூட்டை கண்டது

கரடி மரத்தில் ஏறியே

Advertisement

Advertisement

கூட்டைப் பிய்த்து எறிந்தது!

-

காகம் அதனைக் கண்டது

கரடியைத் தட்டிக் கேட்டது

காக்கைப் பயலே ஓடிப்போ

கரடி திமிராய்ச் சொன்னது!

-

காக்கை பொறுமை காத்தது

கரைந்தே பறந்து சென்றது

கரடி நடந்து செல்கையில்

குழிக்குள் திடீரென விழுந்தது!

-

அங்கே வந்த காகமும்

அந்தோ பரிதாபம் என்றது

அடுத்த நிமிடம் பறந்தது

ஆனையைக் கூட்டி வந்தது!

-

தும்பிக் கையால் கரடியை

தூக்கியே எடுத்தது யானையும்

கரடியின் திமிர் ஒழிந்தது

காக்கையும் யானையும் மகிழ்ந்தது!

வசீகரன், தேனாம்பேட்டை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments