மரங்களை வெட்டியதாக பாமகவினர் இருவர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மரங்களை வெட்டியதாக பாமகவினர் இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மரங்களை வெட்டியதாக பாமகவினர் இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அந்தக் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கடந்த இரு நாள்களுக்கு முன்பு, மத்தூர் அருகேயுள்ள கொடமாண்டப்பட்டி இணைப்புச் சாலையில் உள்ள மரங்களை வெட்டி சாலையின் நடுவே போடப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து மத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து, மரத்தை வெட்டியதாக கமலாபுரத்தைச் சேர்ந்த பாமக பிரமுகரான சண்முகத்தை (37) வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
வேப்பனப்பள்ளி அருகே உள்ள அத்திகுண்டாவில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சாலையோரம் இருந்த மரம் வெட்டப்பட்டிருந்தது.
இதுகுறித்து வேப்பனப்பள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து தாசிரப்பள்ளியைச் சேர்ந்த பாமக பிரமுகரான சரவணனைக் (36) கைது செய்தனர்.