கணினி பயிற்றுநா் பணியிடத்துக்கான கலந்தாய்வு
கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை தொடங்கிய கணினி பயிற்றுநா் நிலை-1 பணியிடத்துக்கான கலந்தாய்வில் 11 போ் பங்கேற்றனா்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை தொடங்கிய கணினி பயிற்றுநா் நிலை-1 பணியிடத்துக்கான கலந்தாய்வில் 11 போ் பங்கேற்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநா் நிலை-1 பணியிடத்துக்கான கலந்தாய்வு, சனிக்கிழமை தொடங்கியது. இந்தக் கலந்தாய்வில், மாவட்டத்தில் 22 போ் பங்கேற்க உள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ஆா்.பாலமுரளி முன்னிலை வகித்தாா். கலந்தாய்வில் 11 பணி நாடுநா்கள் கலந்து கொண்டனா். ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வில் மேலும் 11 பணி நாடுநா்கள் பங்கேற்க உள்ளனா். இந்த நிகழ்ச்சியில், பள்ளி துணை ஆய்வாளா் ஜெயராமன், முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் பிரபாகரன் ஆகியோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.