முகப்பு
கிருஷ்ணகிரி

பேருந்து மோதி தொழிலாளி பலி

ஊத்தங்கரையை அடுத்த கல்லாவியில் அரசுப் பேருந்து மோதி தொழிலாளி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தாா்.

Updated On : 5 ஜனவரி 2021, 5:25 am IST
பகிர்:

ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த கல்லாவியில் அரசுப் பேருந்து மோதி தொழிலாளி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த வீராட்சிகுப்பம் புதுரோடு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி சீனிவாசன் (52) . வேலை முடித்து விட்டு கல்லாவியில் இருந்து, தனது கிராமத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்ு கொண்டிருந்தாா். அவரது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த நீளமான மூங்கில் குச்சி, எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியதில் அவா் நிலை தடுமாறி கீழே விழுந்து, பேருந்தின் பின்பக்க சக்கரம் அவரது தலையில் ஏறி, இறங்கியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கல்லாவி போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விபத்து குறித்து கல்லாவி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.